எலிசபெத் மகாராணியும், ஜெயலலலிதாவும்
இரா .காஜா பந்தா நவாஸ்,
எழுத்தாளர்
என்னுடைய
பள்ளி காலங்களில் என் தமிழாசிரியர்கள் மகேந்திரன் ஐயா மற்றும் பாதர் ஜமால் ஐயா அவர்கள்
(பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) எங்களுக்கு எங்கள் ஊர் (மதுரை மாவட்டம், திருமங்கலம்
தாலுகா) தியாகி விஸ்வநாத தாஸ் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். தியாகி விஸ்வநாத தாஸ்
அவர்களின் விடுதலை வேட்கை, நாடகத்தமிழ், வள்ளி திருமண நாடகம் என பல தகவல்களை தந்தார்கள்.
தனது வாழ்வில் மகாத்மா காந்தியை சந்தித்தற்கு பிறகு 29 ஆண்டுகளில் 29 முறை சிறை வாசம்
அனுபவித்தவர் விஸ்வநாத தாஸ். நாடக மேடையில்
தனது உயிரை துறந்தவர்.
"கொக்கு பறக்குதடி பாப்பா -அது
வெள்ளை நிற கொக்கு - அதை நீயும்
கோபம் இன்றி குப்பிடடி பாப்பா"
என்று பாடி
விடுதலை வேட்கையை தூண்டியவர். பெரிதும் நோய் வாய்ப் பட்ட நிலையிலும் வெள்ளை கொக்கு பறக்குது பார் என்று பாடி வெள்ளையர்களை
சீண்டியவர். "மாய வாழ்வே எம் மண் மேயுதே"
என்று வருத்தப்பட்டு பாடியவர் எம் தியாகி. அன்று நடந்தது பேராண்மை பொருந்திய எலிசபெத்
மகாராணியின் ஆட்சி. ஏன் என்றால் வனவாசம், எதற்கு என்றால் சிறைவாசம். அது தான் மகாராணியின்
ஆட்சி.
நடப்பது மக்களாட்சி தானே, மகாராணியின் ஆட்சி
அல்லவே
தலைமைச்செயலக
வளாகத்தில் போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்திய எதிர்க்கட்சித்தலைவர் உட்பட 60 சட்டமன்ற
உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மீண்டும் மகாராணியின் ஆட்சியை
நினைவுப்படுத்துகிறது. முதலமைச்சர் அவர்களே ! உங்களை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று நினைக்கிறீர்களா ? நடப்பது மக்களாட்சி
தானே, மகாராணியின் ஆட்சி அல்லவே. முதலமைச்சர்
விமர்சனங்களுக்கு அபாற்பட்டவரா என்ன ? வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகரின் சஸ்பெண்ட்
உத்தரவு பற்றி நாங்கள் கேள்வி கேட்க வில்லை. போட்டி
சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தி சபாநாயகரையும் அமைச்சர்களையும் சீண்டினார்கள் என்பதற்காக
வழக்குகள் பாய்வதா ? நடப்பது மக்கள் ஆட்சியா ? மகாராணி ஆட்சியா ? சட்டமன்றத்தில்
அதிக நேரம் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் என்ற சிறப்பு பெற்றவர் நீங்கள். தங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.
இந்த தேசத்தின் பிரதமர் பாராளு மன்றங்களிலோ,
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சட்டமன்றத்திலோ பேசும் போது பிற உறுப்பினர்கள் குறுக்கிட்டு
பேச முடியும் ? ஆனால் பாராளு மன்றங்களிலோ சட்டமன்றத்திலோ எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்
போது முதலமைச்சர்/பிரதமர் உள்பட யாரும் குறுக்கிட்டு பேச முடியாது என்பது தான் ஜனநாயகத்தின்
சிறப்பு. மிகவும் கவனமாக தடுக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தல்,
அனுமதியின்றி கூடுதல் என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு வலு இருந்தால் போட்டி சட்டமன்றம்
நடத்தினார்கள், சபாநாயகரையும் அமைச்சர்களையும் சீண்டினார்கள் என்று ஏன் வழக்கு பதிவு
செய்யவில்லை ? ஜாமீனில் வெளி வர முடியாத வழக்குகள்
ஏன் தொடுக்கவில்லை ? நடப்பது மக்களாட்சி தானே,
மகாராணியின் ஆட்சி அல்லவே. தங்களுக்கு நன்றாக தெரியும், தறி கெட்டு ஓடும் குதிரையின்
மூக்காணி நீதிமன்றங்களின் கையில் உள்ளது. தங்களின் மீதும், அரசின் மீதும் வரும் விமர்சனங்களை
முதலில் முழுமையாக கேளுங்கள், பிறகு விளக்கம்
சொல்லுங்கள். அதை விட்டு எதற்கு எடுத்தாலும் வழக்குகள் என்றால் ? மீண்டும் மீண்டும்
நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு ஆளானால் ? நடப்பது மக்களாட்சி தானே, ? மகாராணியின் ஆட்சி
அல்லவே. அமைச்சர்கள் புகழ்வது போல் நீங்கள்
வீர லட்சுமியாக தைரிய லட்சுமியாக இருக்கும் போது ஏன் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது இத்தனை
வழக்குகள் மற்றும் விசாரணைகள். நடப்பது மக்களாட்சி தானே, மகாராணியின் ஆட்சி அல்லவே.
தங்கள் வீட்டு பெரிய நூலகத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த நூலகத்தில்
நிச்சயம் திருக்குறள் இருக்கும். திருக்குறளை
எடுத்து பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்
குறள் 448 - இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும், குறளை ஒரு முறை படிக்கவும். தங்களுக்கு சாமானியனால் கூட அறிவுரை கூற முடியும் என்று நினைக்கிறேன்
ஏன் என்றால் நடப்பது மக்களாட்சி தானே, மகாராணியின்
ஆட்சி அல்லவே.
2006 ல்
அதிமுகவினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நீங்கள் மட்டும்
அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினீர்கள். தங்களின்
துணிச்சலை நாடு அறியும், விளக்கம் தேவை இல்லை. துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும், விவாதத்தில்
பங்கேற்று பேசியிருக்க வேண்டும் என்று பேசுவதற்கு முன்பு
தாங்கள் எதிர்க்கட்சி ஜனநாயகம் குறித்து
முழுமையான அறிவும் தெளிவும் பெற வேண்டும்.